ஊடகங்களில் வௌியான செய்திகள் உண்மையில்லை!

14 0

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் என்ற வகையில், 2024 ஆம் ஆண்டு மே மாதம் 1 அல்லது 2 ஆம் திகதி எந்தவிதமான அறிவித்தலையும் வெளியிடவில்லை என அவர் அந்த விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் அறிக்கை வௌியிட்டுள்ளதாக கூறி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகவும், அவை பொய்யான செய்திகள் எனவும் அந்த விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.