ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்ஷ பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை, சட்டத்திற்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளார்.