ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்ற நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பெரமுன கட்சியின் யாப்பின் பிரகாரம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் இந்த விடயம் குறித்து விரைவில் முடிவு எடுப்பார்.
கட்சியின் யாப்பு மற்றும் சட்டங்களின்படி ஒருவர் மற்றுமோர் அரசியல் கட்சியின் உறுப்புரிமையை பெற்றவுடன் அவரின் கட்சி உறுப்புரிமையை விரைவில் இழக்க நேரிடும்.
அமைச்சர் விஜயதாஸ சிறீலங்காக பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றதுடன் இந்தக்கட்சி ஊடாகவே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மற்றுமோர் கட்சியின் பதவியைப் பெற்று குற்றமிழைத்துள்ளார்.
இதனால், அவர் பெரமுன கட்சியின் உறுப்புரிமையை இழப்பார்.
இதன் மூலம் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழப்பார் என தெரிவித்துள்ளார்.

