இலங்கை இளநீருக்கு மவுசு அதிகரிப்பு

169 0

இலங்கை இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் கேள்வி துரிதமாக அதிகரித்துள்ளதாக  இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ் வருடம் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தரவுகள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை (CDA) அதிகாரிகளுடன் நேற்று அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போதே இதனை தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின் போது, இலங்கையின் தென்னைச் செய்கையின் அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

2022 ஆம் ஆண்டு 11 மில்லியன் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டு 110 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இளநீரின் தொகை 14 மில்லியன் எனவும் இதன் மூலம் கிடைத்த வருமானம் 140 மில்லியன் ரூபா எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.