வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து, கைதான இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

