தமிழ் விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்தியிலும் மயிலத்தமடுவில் புதிய புத்தர்சிலை

154 0

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு மேய்ச்சல் தரை நிலம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பண்ணையாளர்கள் 32 ஆவது நாளாக தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் அத்துமீறி அப்பகுதிகளில் தொடர்ந்தும் குடியேறிவரும் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக புதிய புத்தர் சிலையை மயிலத்தமடுவில் வைக்கும் செயற்பாட்டில் மட்டக்களப்பில் வன்முறை செயற்பாடுகள் ஊடாக ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அம்பிட்டிய சுமணரத்ன என்ற பௌத்த பிக்குவும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆகியோர் மேற்கொண்டுள்ளதாக தமிழ் பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.