காலி – மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

62 0

காலி – மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

42 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலகக்குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர்.

இதன்;போது, ​​வீட்டில் பதுங்கியிருந்த சந்தேகநபர் துப்பாக்கியால் சிறப்பு அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

பதிலுக்கு விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபரை, வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர், அண்மையில் காலி- கராகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தெடிமுணி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.