வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

91 0

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஊவா, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.