இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு அல் ஹூசைன் கோரிக்கை

225 0

2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செய்ட் அல் ஹூசைன் இலங்கையின் ஆளும் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் 34வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இன்று ஆணையாளர் அல் ஹூசைன் இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தார்.

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகளை பாராட்டிய அவர், வடக்கு கிழக்கில் காணி உள்ளிட்ட விடயங்களில் அரசு மந்த போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சுமத்தினார்.

இதுவிடயத்தில் அரசாங்கம் துரித நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும், 2015ஆம் ஆண்டி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி அரசாங்கம் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆணையாளர் கோரிக்கை விடுத்தார்.