யாழ். கொடிகாமத்தில் இருந்தும் திலீபன் ஊர்தி பவனி இன்று ஆரம்பம்

101 0
தியாகதீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (24) ஆரம்பமானது.

இந்த ஊர்தி பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பமாகி, சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து,  கிளிநொச்சியை வந்தடைந்து செவ்வாய்க்கிழமை (26) யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளது.