ஜார்கண்ட்: முன்னாள் துணை மேயர் உள்ளிட்ட 4 பேர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை

259 0

ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாநகர முன்னாள் மேயர் உள்ளிட்ட 4 பேர் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாநகர முன்னாள் மேயர் உள்ளிட்ட 4 பேர் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாநகர முன்னாள் மேயர் நீரஜ் சிங் நேற்று இரவு தான்பாத்தில் உள்ள ஸ்டேல் கேட் பகுதி அருகே காரில் வந்துகொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரை வழிமறித்து ஏ.கே.47 ரக துப்பாக்கியால் கண்மூடித் தனமாக காரின் மீது சுட்டுத்தள்ளினர்.

இந்த கோர தாக்குதலில் காரில் இருந்த நீரஜ் சிங், அவரது நண்பர், மெய்க்காப்பாளர் மற்றும் கார் டிரைவர் ஆகிய நான்கு பேரும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீரஹ் சிங் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.