கனடாவின் ஒன்ராரியோ மாகாண அமைச்சரான ஈழத்தமிழர்

164 0

கனடாவின் ஒன்ராரியோ மாகாண போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக ஈழத்தமிழர் விஜய் தணிகாசலம் நேற்றைய (22.09.2023) தினம் பொறுப்பேற்றுள்ளார்.

2022 பிப்ரவரி மாதம் நடந்த ஒன்றாரியோ மாகாண தேர்தலில் ஸ்கார்பாரோ ரக் பார்க் (Scarborough Rouge Park) தொகுதியில் முற்போக்கு பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் இரண்டாவது தடவையாகவும் பெருமளவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.

ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றி வந்தவர் இப்போது அமைச்சராகியிருக்கிறார்.இவரது பெற்றோர் தமிழீழத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள்.

கனடா ஒன்றேரியா மாகாண சபையில், தமிழின அழிப்பு (Tamilgenocide) இனப்படுகொலை என்கிற தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குக் கடுமையாக உழைத்தவர்.தமிழ் மக்களுக்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னகர்த்தியவர்.