மன்னாரில் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம்

104 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபத்தின் நினைவேந்தலினை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால். தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம்  வெள்ளிக்கிழமை (21) மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களை மையபடுத்தியும் ,மன்னார் நகர பகுதியிலும் தியாக தீபத்தின் வரலாற்று நினைவுகளை உள்ளடக்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது.

21,22 ஆம் திகதிகளில் வடக்கு தழுவியரீதியில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.