உருளைக் கிழங்குக்கான வரி நீடிப்பு

79 0

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரி செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அடுத்த 4 மாதங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு 01 கிலோ கிராமிற்கு 50 ரூபா விசேட பண்ட வரியை இந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

குறித்த வரி 06 மாத காலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.