கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 25 வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது

311 0
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை இருபதைந்தாவது நாளாக  தீர்வின்றி தொடர்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு தொடர்கிறது
தங்களுக்கு  நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இவ்வாறு தொடர் போராட்டத்லதில்  ஈடுப்பட போவதாகவும், சில வேளைகளில் தங்களின் போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி எதிர்வரும் நாட்களில் போராட வேண்டி வரும் எனவும் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.