காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனஈர்ப்பு போராட்டம் இன்று 23 ஆவது நாளாகவும் (காணொளி)

216 0

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனஈர்ப்பு போராட்டம் இன்று 23 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது,

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள்,

இரகசிய முகாம்களில் வைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகள் தொடர்பில் விபரங்களை வெளியிடுங்கள்,

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து குறித்த பொராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.