வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு(காணொளி)

278 0

வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே ஏற்பட்ட காதலே குறித்த பிரச்சினைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் இளைஞனும், யுவதியும் திருமணம் செய்த நிலையில், இளைஞனின் வீட்டில் இருந்தபோது, நேற்று மதியம் வெள்ளை நிற வாகனத்தில் இளைஞனின் வீட்டிற்கு சென்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொண்டு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த பெண்ணின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவினர் தீக்கிரையான வீட்டில் கைரேகையடையளங்களை பார்வையிட்டதுடன், குறித்த இளைஞன் வீட்டார் மீது தாக்குதல் மேற்கொண்ட வாள்கள் மற்றும் பாரிய கத்திகளை கைப்பற்றியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.