ஐ.எஸ் தீவிரவாதிகள் மொசுவில் இருந்து விரட்டப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் – அமெரிக்கா

239 0

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கின் மொசுவில் இருந்து விரட்டப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி பிரட் மெக்குர்க் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகளுக்கு ஈராக்கில் இருந்து வெளியேருமாறு ஈராக் படைகள் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈராக்கின் மிகப்பெரிய இரண்டாவது நகரான மொசுலை கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இதன்போது பல புராதன சின்னங்கள் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த மாதத்தில் இருந்து பாரிய இராணுவ தாக்குதல்களை அமெரிக்க கூட்டு படைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.