பேர்லின் நகரின் வானூர்தி பணியாளர்கள் பணிபுறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

228 0

ஜெர்மன் பேர்லின் நகரின் வானூர்தி பணியாளர்கள் 25 மணி நேர பணிபுறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

பேர்லின் நகரின் டோகால் மற்றும் ஸ்கோன்பில்ட் ஆகிய வானூர்தி நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவி;க்கின்றன.

இதன் காரணமாக சுமார் ஆயிரம் வானூர்தி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேதன கொடுப்பனவை முன்னிலைப்படுத்தி அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.