ஆர்.கே. நகரில் போட்டியிட கூடாது என மிரட்டல்: ஜெ.தீபா புகார்

246 0

அரசியலுக்கு வந்த பின் கூலிப்படையினர் மூலம் அதிகப்படியான மிரட்டல்கள் வருவதாக ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த பின் இதனை தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா தியானம் செய்ய வந்தார். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் சிறிது நேரத்திற்கு அங்கேயே அமர்ந்து தியானம் செய்தார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
‘அரசியலுக்கு வந்த பின் கூலிப்படையினர் மூலம் அதிகப்படியான மிரட்டல்கள் வருகிறது, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கூடாது என தொல்லை தருகின்றனர்’, என அவர் கூறியுள்ளார்.
ஜெ.தீபாவுடன் அவரது கணவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்தார். ஜெ.தீபா திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.