தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க சர்வதேசத்திடம் போகக்கூடாது!

438 0

rejinold-kure-720x480தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்திடம் போகக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்தினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழர் தரப்பினால் சர்வதேச விசாரணை கோரப்பட்டுவரும் நிலையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உள்நாட்டில் யுத்தம் நடைபெற்றது, உள்நாட்டில் நடந்த யுத்தத்துக்கு உள்நாட்டிலேதான் தீர்வு காணவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.