கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19 ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 20 ஆம் திகதி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 19 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.