ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களை சந்தித்தது.

299 0

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 5 வது நாளான இன்று மதியம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களால் வரவேற்கப்பட்டத்தோடு , பயணத்தை மேற்கொண்டவர்களின் பயண நோக்கத்தை கரிசனையுடன் கேட்டறிந்து , ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் பொருட்டு தனது முயற்சியை முன்னெடுக்கவுள்ளதாக உறுதியளித்தார். இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருக்கும் வரிச்சலுகை தொடர்பாக உரையாடல் மேற்கொண்ட தருணத்தில் , இவ்விடையத்தை தனது கட்சியை சார்ந்த சக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறினார். சந்திப்பின் இறுதியில் ஈழத்தமிழர்களின் இனவழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் மனுவும் ஈருருளிப்பயணத்தை மேற்கொண்டவர்களாலும் , தமிழ் இளையோர்களாலும் மற்றும் நகர செயற்பாட்டாளர்களாலும் கையளிக்கப்பட்டது. நகரசபையில் நடைபெற்ற இச் சந்திப்பை சார்புருக்கன் நகர பத்திரிக்கையாளர் கலந்துகொண்டு ஆவணப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.