3 வது நாளின் பயண இறுதியில் நேற்று இரவு மனிதநேய ஈருருளிப் பயணம் யேர்மன் நாட்டின் எல்லையை அண்மித்தது

273 0

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளின் பயண இறுதியில் இன்று இரவு மனிதநேய ஈருருளிப் பயணம் யேர்மன் நாட்டின் எல்லையை அண்மித்தது. மிகவும் குளிரும் , மழையுமான காலநிலையிலும் , ஆபத்தான சரிவுகளை கொண்ட வீதிகளின் ஊடாக ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் பயணித்தது.இன்று அதிகாலை 7 மணிக்கு யேர்மன் நாட்டின் சார்புருக்கன் நகரத்தை நோக்கி பயணிக்கின்றது.

மனிதநேய ஈருருளிப்பயணம் எதிர்வரும் நாட்களில் யேர்மனி,பிரான்ஸ் இறுதியாக சுவிஸ், ஜெனிவா மாநகரை சென்றடைய உள்ளது .இன்றைய பயணத்தில் வேற்றின ஈருருளிப் பயண வீரர்களோடு ஏற்பட்ட சந்திப்பில் எமது மனிதநேய ஈருருளிப் பயணத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தியதோடு துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்கள். நாளைய தினம் காலை 9 மணியளவில் ஈருருளிப் பயணம் ஜேர்மன் எல்லையை சென்றடைய உள்ளது.

எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால்,ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.