பிரித்தானியாவில் ஐநாவை நோக்கி நீதி கேட்கும் மாபெரும் அறவழிப் போராட்டம் ஆரம்பம் !

238 0

தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும்
ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது என்று இலண்டனில் மாபெரும் அறவழிப் போராட்டத்தை இன்று மாலை ஆரம்பித்துள்ளனர்.

அத்தோடு இலங்கை படைகளால் அபகரிக்கப்பட்ட கோப்பாபுலவு மக்களினது நிலங்களை மீள கையளிக்குமாறும் அதே போன்று வடக்கு கிழக்கு தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகளை பெற்றுத்தருமாறும் தமிழ் மக்களின் சமகால பிரச்சனைகளை முன்னிறுத்தி உண்ணாவிரத போராட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

10 Downing Street , Westminster , London SW14 2AA எனும் இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளதாகவும் இதில் மக்கள் கலந்துகொண்டு எமது செய்தியை ஐநா சபைக்கு தெரிவிக்க முன்வருமாறும் அழைக்கப்படுகின்றனர் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் ஏனைய பல அமைப்புகள் தெரிவித்துள்ளன .