சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் 170ஆவது இசை ஆராதனை…(காணொளி)

428 0

வட இலங்கை சங்கீத சபையினால் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் 170ஆவது இசை ஆராதனை இன்று யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரனையுடன் மருதனார்மடம் வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வு வட இலங்கை சங்கீத சபையின் தலைவரும் யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளருமாகிய ந.தெய்வேந்திரராஜா தலைமையில் நடைபெற்றது.

இசை ஆராதனை நிகழ்வில் பிரதம விருந்தினராக தழிழரசுக்கட்சியின் தலைவர்; மாவை சேனாதிராசா, கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன், சிறப்பு விருந்தினராக முன்னாள் வட இலங்கை சங்கீத சபையின் தலைவர் அருளீஜ்வரி வேதநாயகம் மற்றும் வட இலங்கை சங்கீதசபை மாணவர்கள் இசை ஆர்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இசை ஆராதனை நிகழ்வில் வட இலங்கை சங்கீத சபை இசைத்துறை மாணவர்களின் இசை ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் தழிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா உரையாற்றுகையில்…