தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில் போராட்டத்தில்..… (காணொளி)

264 0

தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தமிழக திரைப்பட இயக்குனரும் தமிழ் உணர்வாளரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ், நேற்றையதினம் இரவு கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர், அதனை விடுவிக்கவேண்டும் என கோரி போராட்டம் நடாத்திவரும் இடத்துக்கு சென்று மக்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

கேப்பாபுலவு போராட்டம் இடம்பெற்று வரும் இடத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புகழேந்தி தங்கராஜ் உலகில் கட்டாயமாக பார்க்கவேண்டிய இடங்கள் என சில இடங்களை சொல்வார்கள் அந்த இடங்களுக்கெல்லாம் சென்றால் ஒரு பரவசம் தோன்றும் ஆனால் நான் இன்று கேப்பாபுலவில் தமது உரிமைக்காக உறுதியோடு போராடும் மக்களின் மண்ணில் எனது பாதங்கள் படும் போது அந்த பரவசத்தை உணர்கின்றேன் என்று கூறினார்….