சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு(காணொளி)

229 0

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறிக்கொண்டு, மக்களிடம் செல்லுவதற்கு தனக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி, மக்களிடம் செல்வதை தவிர்த்துக் கொள்வதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.