பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் ஆதரவு(காணொளி)

251 0

முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் ஆதரவு வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி இன்று 25 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர்.

இந் நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை சேர்ந்த மாணவர்களும் விரிவுரையாளர்களும் நேற்றையதினம் சென்றிருந்ததோடு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர்.