காங்கேசன்துறை கடற்பரப்பில் 150 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது

280 0
காங்கேசன்துறைக்கு மேலே  உள்ள கடல்பரப்பில் நேற்று காலையில்.  150 கிலோ கஞ்சாவுடன் ஐவர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கடற்படையினர் தகவல் தருகையில் ,
இந்தியாவில் இருந்து கடத்தி வந்திருக்கலாம்  என நம்ப்ப்படும் 150 கிலோ கிராம் கஞ்சாவினை நேற்றைய தினம் பகல் வேளையில் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
பகல்வேளையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய படகினை கடற்படையினர் சோதனையிட்ட சமயமே குறித்த தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகில் கஞ்சாப்பொதிகள் கைப்பற்றப்பட்டவேளையில் குறித்த படகினில் இருந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் கஞ்சாவினையும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.