உயிருக்காகப் போராடும் 20 வயது இளைஞனுக்கு உதவுங்கள்!

334 0
கருணை உள்ளம் கொண்டவர்களே!, தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிருக்காகப் போராடும் கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயது இளைஞனது உயிர் காக்க விரைந்து உதவுங்கள்!
கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசித்துவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருமதி தயாவதி கருணாமூர்த்தி அவர்களது மகனான கருணாமூர்த்தி தாருஷன் (வயது-20) என்பவர் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுச் செயலிழந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுச் செயலிழந்துள்ளமையினால் இவரது உயிரைக் காப்பாற்ற அவசரமாக ஒரு சிறுநீரகத்தையாவது மாற்றீடு செய்ய வேண்டும் எனவும் அதற்காக 30 இலட்சம் ரூபா பணம் தேவைப்படும் என மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது.
மிகவும் ஏழ்மையான நிலையில் காணப்படும் இவரது குடும்பத்தில் இவரது தந்தையாரும் வன்னி யுத்தத்தில் அகப்பட்டு தனது வலது கையில் காயப்பட்ட நிலையில் வலது கையும் செயற்படாத நிலையில் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
யுத்தத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வரும் இக்குடும்பத்தில் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்காகப் போராடி வரும் 20 வயது தாருஷனை உங்களது குடும்பத்தின் ஒரு உறவாகக் கருதி இவரது உயிரைக் காப்பாற்ற விரைந்து உதவுமாறு அவரது தாயார் பரோபகாரிகளான மனிதமுள்ளவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்துப் பணிவாக வேண்டி நிற்கின்றார். மனிதமுள்ள உறவுகளே!
தொடர்புகளுக்கு:- திருமதி க.தயாவதி(தாய்) +94775785173
வங்கிக் கணக்கு இல:- 8155007744 (கொமர்ஷல் வங்கி)
மேலதிக விபரங்களுக்கு:- பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது தொலைபேசி இல. +94776913244 உடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.
மேற்படி நபரது மருத்துவச் சான்றிதழ், கிராம சேவையாளர், பிரதேச செயலகம் என்பவற்றால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களின் நிழற் பிரதிகளும் இணைக்கப்பட்டுள்ளன