கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் போராட்டங்கள்

237 0

சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

நேற்று (22.02.2017) புதன்கிழமை பிரான்சு பாராளுமன்றத்திற்கு அருகில் பிற்பகல் 15.00 மணிமுதல் 18.00 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்போராட்டம் எதிர்வரும் 01.03.2017 புதன்கிழமை பாரிஸ் றிப்பளிக் பகுதியில் இடம்பெறவுள்ளது.

U