முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் !

166 0

தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றையதினம் (27) இடம்பெற்றது .

படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் தமது பிள்ளைகளை உறவினர்களை நினைவில் இருத்தி துயிலுமில்லங்களுக்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் , முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலுமில்லம் ,முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் ,தேராவில் மாவீரர் துயிலுமில்லம் , வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ,தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம், இரட்டைவாய்க்கால்  மாவீரர் துயிலுமில்லம் ,ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ,முல்லைத்தீவு நகர கடற்கரை  ஆகிய பதினோரு துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது .

ஒவ்வொரு துயிலும் இல்லங்களும்  மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.

இதனைவிடவும் மக்கள் வீடுகளிலும் , வியாபார நிலையங்களிலும் , ஆலயங்களிலும் , பொது இடங்களிலும் விளக்கேற்றி மாவீரரை நினைவேந்தினர் .