தமிழீழம் சுமக்கும் தாயுமானவனே வாழி!

279 0

ஓர் இனத்தின் சுதந்திரமே அதன் உயிர்ப்பின் ஆணிவேராகும். இறையாண்மை நிறைந்த அரசே செழிப்புற்று ஓங்கி வளர முடியும். தமிழீழ தேசம் தன்னாட்சி பெற்று, சுதந்திர நாடாக மிளிர,பல தடைக்கற்களை தாண்ட வேண்டிய நிலையில்,சிங்கள அரசின் கொடூரத்தின் கொடுவாயிலிருந்து தமிழீழத்தை மீட்டெடுக்க, இயற்கை தந்த கொடையாக எழுந்த தமிழீழ தலைவரான மேதகு. வே. பிரபாகரன் அவர்கள், தமிழீழப் போரின் ஆணிவேராய் நின்று, எம்மை வழி நடத்தி, பல களமுனைகளில் வெற்றி வாகை சூடி ,உலகின் வல்லரசுகளே புருவம் உயர்த்தும் இனமாக பதிவு செயதுள்ளார்.

அத்தோடு ஒர் தனியரசை நிறுவி ,மிகச்சிறந்த நேர்மையான கட்டமைப்புகளை உருவாக்கி போரின் வியூகங்களையும் , போராட்டத்தின் பல படிநிலைகளின் அநுபவங்களையும் எமக்கு தந்ததோடு, தமிழீழப் போரின் எதிர்கால வழி நடத்தலின் சூத்திரங்களையும் வகுத்த தூரநோக்கான போர் ஞானியாவார்.இத்தகைய பெருமை வாய்ந்த எங்கள் தமிழீழத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை இதய பூர்வமாக வாழ்த்துவதில் “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு” யேர்மனி கிளை பெருமிதம் கொள்கின்றது.இந்த வரலாற்று நாயகனின்
பிறந்த நாளில் , தலைவரின் வழிநடத்தலின் பாதையில் தடம் பதித்து ,மாவீரர்களின் தியாகக் கனவுகளின் வழி செல்வோமென உறுதி பூணுவோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.