டென்மார்க் ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.

131 0

ஓல்போக்,கொபனேகன் மற்றும் ஒடன்ஸ்ச பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ந்து, மாவீரர் வாரத்தின் நான்காம் நாளான இன்று 24.11.2022 ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது .தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மறவர்களின் நினைவைச் சுமந்து, கொடிவணக்கம்இ பொதுச் சுடரேற்றல்இ ஈகைச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம், அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுகளை சுமந்த கவிதைகள், மாவீரர் கானங்கள், நடனம், சிறப்புரைகள் என நிகழ்வுகள் எமது இளைய தலைமுறையினரால் மிகுந்த எழுச்சியுடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பது போல், எமது அடுத்த தலைமுறையினர் இவ்வாண்டு டென்மார்கின் நான்கு பல்கலைக்கழங்களில், தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை சிறப்பான முறையில் ஒழுங்கு செய்து நினைவு கூரியுள்ளனர்.

அத்தோடு எதிர்வரும் 27.11.2022 அன்று கேர்ணீங் மற்றும் கொல்பேக் நகரங்களில் நடைபெறவுள்ள, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிட தக்கது.