சமத்துவக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

147 0

2022 மாவீரர் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக்கட்சியின் அலுவலகத்தில்  முன்னாள் அரசியல் துறைப் போராளி வேங்கை தலைமையில் இன்று (25) காலை  இடம்பெற்றது.

கணவன் மற்றும் சகோதரியை மாவீரராக கொண்ட கந்தசாமி சுமதி  என்பவர் பொதுச்சுடரை ஏற்றி வைக்க முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், கட்சியின் உறுப்பினர்கள்  ஏனைய சுடர்களை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து மாவீரர்களின் பொது நினைவு படத்திற்கான மலர் அஞ்சலி இடம்பெற்றது.