ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

183 0

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் தமது கட்சிக்கு அறிவிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த தனியார்மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் உரிய விழிப்புணர்வு தேவை என அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இவ்வாறு தெரிவித்தார்.