கேரளா கஞ்சாவைக் கடத்தியவர் கல்முனையில் கைது

144 0

250 கிராம் கேரளா கஞ்சாவை கடத்திய சந்தேக நபரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை ( நவ. 21)  இரவு விசேட அதிரடிப்படையினரின்  புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில் உள்ள   கல்முனை விசேட அதிரடிப்படையினர்   மேற்கொண்ட நடவடிக்கையில் இக் கைது இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வீரமுனை பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் மேற்குறித்த  கஞ்சாவை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்தவேளை கைதானார்.

அவரிடமிருந்து இருந்து பொதி செய்யப்பட்ட  250 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட நபர் கஞ்சாவுடன் சம்மாந்துறை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.