இந்தோனேஷியா பூகம்பத்தில் 162 பேர் பலி: இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்

107 0

இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரத்துள்ளது.

ஜாவா தீவில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சியான்ஜூர் நகருக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.

இப்பூகம்பத்தினால் 162 பேர் உயிரிழந்துள்ளனர் என மேற்கு ஜாவா ஆளுநர் ரித்வான் காமில் தெரிவித்துள்ளார். 2000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 700 பேர் காயமடைந்துள்னர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கட்டட சிதைவுகளுக்கு மத்தியில், உயிர் தப்பியவர்களை தேடும் நடவடிக்கை இன்று செவ்hவய்க்கிழமையும் தொடர்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.