சிறுபான்மை கட்சிகள் இன்று பிரதமரை சந்திக்கின்றன.

242 0

எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் இன்று பிரதமரை சந்திக்க உள்ளது.

அமைச்சர் மனோ கணேஸன் இதனைத் தெரிவித்தார்.

எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான, தமது கட்சியின் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் அவை, உள்ளடக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து தெரியாது.

எனவே இவை குறித்து இன்றைய தினம் பிரதமருடன் கலந்துரையாட உள்ளதாகவும் மனோ கணேஸன் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் நாளை மறுதினம் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.