வவுனியா பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்(படங்கள்)

263 0

வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நொச்சுமோட்டை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

யுத்த காலத்தில் பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்த பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள், இந்தியா உட்பட பல இடங்களுக்கும் சென்று மீள தமது கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

இவ்வாறு குடியேறிய 162 குடும்பங்கில் 59 பேருக்கு வீடுகள் கிடைத்த போதிலும் ஏனையோருக்கு இது வரை வீட்டுத்திட்டங்கள் கிடைக்கவில்லை.

உப குடும்பங்களுக்கும் வீட்டுத் திட்டம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளக வீதிகள் உட்பட இக்கிராமத்திற்கான பிரதான வீதிகளும் செப்பனிடப்படாமல் உள்ளதுடன் தண்ணீர் பிரச்சனைகளை இம் மக்கள் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கொட்டகை வீடுகளில் தமது வாழ்க்கையை நடாத்திவரும் இம்மக்களுக்கு நிரந்த வீட்டுத்திட்டம் கிடைப்பதற்கு அதிகரிகள் ஆவன செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.