யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

215 0

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசி தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.

அத்துடன் வீட்டில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் சேதம் விளைவித்து விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.