மட்டக்களப்பில் பட்டப்பகலில் நகைகளும் பணமும் திருட்டு

226 0

நகைகளும் பணமும் திருடப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி எம்.கே.வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றதை அவதானித்த திருடன் பட்டப்பகல் நேரத்தில் ஜன்னல் வழியாக வீட்டினுள் நுழைந்து அலுமாரியில் இருந்த பத்து பவுண் நகைகளையும் ஐம்பதாயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

திருட்டில் ஈடுபட்ட திருடன் அவ் வீட்டின் மின்விசிறியை போட்டவாறு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.