திருக்கோணேஸ்வரர் தேவாரத்தை சபையில் பாடிய ஸ்ரீதரன்

109 0

பாராளுமன்றத்தில் ”நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி”  என்னும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான தேவாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின்  ஸ்ரீதரன் சபையில் உரத்துப் பாடினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை திருகோணமலை திருக்கோணேஸ்வரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை  பிரேரணையை சமர்ப்பித்து  உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனால் இந்த தேவாரம் உரத்துப் பாடப்பது.

தனது உரையை  ஆரம்பிக்க முன்னர்”தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற மாணிக்கவாசகரின் அருள்வாசகத்தினை   குறிப்பிட்டபின்னரே ”நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி”என்ற திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான தேவாரத்தை உரத்துப்பாடி திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வரலாறு, அங்கு தற்போது இடம்பெறும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் மிகவும் ஆவேசமாக நீண்ட உரையாற்றினார்.

இலங்கையின் நீதித்துறையில் தமிழன் தீர்ப்பு வழங்கினால் செல்லாது, சிங்களவன் தீர்ப்பு வழங்கினால் தான்  அது செல்லும் என்ற இனவாத சிந்தனையே குருந்தூர் மலை  விவகாரத்தில் கையாளப்படுவதாகவும், எல்லா இடங்களிலும் தியானத்தில் இருக்கும் புத்தர் திருக்கோணேஸ்வராலய மலையில் மட்டும் நிமிர்ந்து அமர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.