வாழைச்சேனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

183 0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலையப் ககுதியில் வைத்து 37 கிராம் 600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 67 வயதுடைய ஒருவரை இன்று  செவ்வாய்க்கிழமை (20) காலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய  சம்பவதினமான இன்று காலை 9.30 மணியளவில்  கதிரவெளி விடே அதிரடிப்படையினருடன் இராணுவ புலானாய்வு பிரிவினர்  இணைந்து வாழைச்சேனை புகையிரத நிலையப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு ஐஸ் போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துக் கொண்டுவந்தவரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் ஜஸ் போதைப் பொருளையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைபொருளையும் அதிரடிப்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.