நாளை முதல் பாராளுமன்றதுதை பொது மக்கள் பார்வையிடலாம்!

160 0

பாராளுமன்றத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நாளை (20) முதல் தளர்த்தப்படுகிறது.

அதன்படி நாளை முதல் பாராளுமன்றத்தின் பார்வையாளர் கூடம் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதுடன், நாளை முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பாராளுமன்றத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியை பெற www.parliament.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் 011 2 777 473 அல்லது 335 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் ஒன்றை அனுப்புவதன் மூலம் அனுமதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மாணவர் குழுக்கள், அரச பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இதே நடைமுறை பின்பற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.