மகாராணியால் நடப்பட்டுள்ள இரண்டு நினைவு மரக்கன்றுகள்

96 0

பேராதனை அரச தாவரவியல் பூங்கா உலகப் புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவாகும். உலகத் தலைவர்கள் இந்தத் தாவரவியல் பூங்காவைப் பார்வையிட விரும்புகின்றனர், அதைப் பார்வையிட்ட பிறகு, ஒரு நினைவு மரமும் நடப்படுகிறது.

பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் 200வது ஆண்டு நிறைவு இவ்வருடம் கொண்டாடப்படுகின்றது. நினைவு மரக்கன்றுகளை ன்னர்கள், ராணிகள், இளவரசர்கள், இளவரசிகள் மற்றும் உலகின் பிற ஆட்சியாளர்கள் நாட்டியுள்ளனர்.

பிரிட்டனின் இரண்டாவது எலிசெபத் மகாராணி, ராணியாக முடிசூட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு 1954 ஏப்ரல் 20 ஆம் திகதின்று தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார். அன்று நடப்பட்ட கொடுணுக மரமே ராணியால் நடப்பட்ட முதல் மரம். இவரது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இந்த மரம் நடப்பட்டதும் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.

மகாராணி இங்கு 1981 ஒக்டோபர் 24 ஆம் திகதியன்று இரண்டாவது நினைவு மரத்தை நட்டார். அந்த மரம் ஒரு திரவ தாம்பலா மரம். கிரேட் பிரிட்டனின் உதவியுடன் கட்டப்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்குச் சென்றபோது அவர் இந்த மரத்தை நட்டார், மே எடின்பர்க் டியூக்கும் அதில் பங்கேற்றார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமான போதிலும் அவரால் நாட்டப்பட்ட செய்த இந்த நினைவு மரக்கன்றுகள் நாளுக்கு நாள் துளிர்விட்டு வளர்ந்துவருகின்றது.