திருகோணமலையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு

154 0

திருகோணமலை – பேதிஸ்புர பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மட்கோ-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.பீ.பிரதீப்குமார (34 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் கால்,கைகள் வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.