தஞ்சாவூர் அருகே திடீர் தீ விபத்து : 150 வீடுகள் எரிந்தது

376 0

download (9)தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். கண்டியூரில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மாற்று திறனாளி ஒருவர் உயிரிழந்தார். தர்கா தெருவில் உள்ள குடிசை வீடு ஒன்றில் திடீரென தீ பற்றியது. இது காற்றின் வேகத்தால் மளமளவென அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து வந்த தஞ்சை, திருவையாறு தீயணைப்பு படை மற்றும் இந்திய விமானப்படையின் 15-க்கும் மேற்பட்ட விமானங்களின் வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

இதனால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர். விபத்தில் ஷேக் அலாவுதின் என்ற மாற்றுதிறனாளி உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன. ஏராளமான வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளன.