சட்டமா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரளை மீதான அனுதாப பிரேரணை, பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர். இந்த படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் நியமித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமரகீர்த்தி எம்.பியின் படுகொலை தொடர்பில் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 41 வயதான சந்தேகநபர் ஒருவர், நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.